எது மனதை உலுக்கி உண்மைபேசும்? … கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

வள்ளுவன் எழுதினான்வாழ்வின் நெறி உரைக்க
பாரதி எழுதினான்
வாழ்வின் பொருள் உரைக்ககம்பன் எழுதினான்காதலை வெளிப்படுத்தகண்ணதாசன் எழுதினான்காதலின் ஆழமதை எடுத்துரைக்ககவிஞரெல்லாம் எழுதினார்கள்கற்பனைச் சிறகை பறக்கவிடகட்டுரைகள் படைத்தார்கள் பலர்
கண்களைத் திறந்திடவேகதைகளையும் தந்தார்கள்கனவுலகில் வாழ்ந்து மகிழகருத்தினில் உதித்தவை யாவுமேஎழுத்துரு கொண்டு உலவினாலும்காவியமாய் இங்கு நிற்பவையோகாலத்தால் அழியாது நிற்பவையேஉருவாக்கப்பட்டு உலாவருபவற்றுள்ஒரு சதம் கூட நிற்பதில்லை என்பேன்
இருப்பினும் படைக்கின்றார்நூலாக்கி அகமதிலே மகிழ்கின்றார்அலமாரியில் அடுக்கி அற்புதமென்கின்றார்ஏட்டுச் சுரைக்காய்கறி(தை)க்கு உதவாதென்பது போல்படைப்பில் பலவிங்கு ஏட்டுச்சுரைக்காயேநெஞ்சில் பதியும் வகை படைத்திடுவீர்பல படைத்து பகட்டு காட்டமுற்படாதுசில படைத்தாலும் சிந்தையிலே நிற்பீர்எவரொருவரன் எழுத்தை தேடிப்பிடிப்பாரோஎந்த படைப்பை படித்து மகிழ்வாரோஎப்படைப்பு யதார்த்தத்தை உணர்த்திடுமோஎது மனதை உலுக்கி உண்மை பேசுமோஅதை மட்டும் நற்படைப்பென்பர்மற்றதை எழுத்துருவில் வந்த குப்பை என்பர்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()