கவிதைகள்

கருத்துப்பிழை அல்ல!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

காட்சிகளை காண்கிறேன்எழுத்துக்களால் உயிர்கொடுக்கிறேன்கவிதை உருப்பெறுகிறுதுகாண்பவைகளில் அனைத்தும் தெரியும்அரவணைக்கப் படுவைகளும் தெரியும்அவலங்கள் தலைவிரித்தாடுவதும் தெரியும்அரவணைப்பை சொன்னால் அன்பனென்பர்அவலங்களைச் சொன்னால் வம்பனென்பர்சமூகத்தில் கிடைப்பவைகளை சேகரிப்பேன்சேகரிப்பவற்றிற்கு எழுத்துக்களால் வண்ணம் பூசுவேன்வண்ணம் பூசிய சேகரிப்புக்கள் வளமாகவும் தெரியும்வளமற்று வரட்சியாயும் தென்படலாம்வளமோ வரட்சியோ சேகரிப்பைப் பொருத்ததேவண்ணத்தைக் குறைகூறி வரட்சி கண்டால் வசைபாடதீர்கடலுக்கு நீலமும் காரம்பசுவுக்கு கருப்பும்வண்ணம் தந்தால் வண்ணத்தில் குறையோஅல்ல உங்கள எண்ணத்தில் பிழையோஇங்கே நடந்து அரங்கேறுவதை நாளும் காண்கிறேன்நடப்பதை சொல்ல எழுத்தின் துணைகொண்டேன்நல்லவற்றை எழுதினால் நல்ல கதையாகிறதுதீயவற்றை சுட்டிக் காட்டினால் சுட்டெரிப்பதேனோநல்லதை எழுத்துக்களால் கெட்டதாக்க மாட்டேன்கெட்டவற்றை என் எழுத்துக்கள் நல்லதாகவும் காட்டிடாதுஉறவு மெச்சவென கவிதையும்ஊர் மெச்சுமென கட்டுரையும்உலகு மெச்சக்கூடுமென கதையும்உலாவருகின்ற எழுத்துலகில்நிலாவது நீலவானில் நீந்துவதுபோலவளர்பிறையாய் ஒளிர்வதும்தேய்பிறையாய்்தேய்வதும்காட்சிப்பிழையாகும் கருத்தினில் பிழை ஏதுமில்லை!

– சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *