மாணிக்கமும் ஆசிரியரும்!…. கவிதை ….. சங்கர சுப்பிரமணியன்.

அற்புதமான நிகழ்வுதான்அதிசயமான நிகழ்வும் கூடமாணவன் மாணிக்கம் வாங்கியமதிப்பெண்கள் பற்றியதேபடிக்கின்ற மாணவன்தான்படிப்பேவராத கடைநிலையனல்லவிருப்பமான பாடம் தமிழாகும்விரும்பிப் படிக்கும் பாடமும் தமிழே
தேர்வில் தேர்ச்சி பெறுமளவுமதிப்பெண்கள் தவறாது பெற்றிடுவான்விரும்பித் தமிழ் படித்தாலும்வாங்கும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுமளவேபெற்றோர் பணிமாற்றத்தினால்மாணவர்கள் சிலர் அவன் வகுப்பில்சேர்ந்தனரேவந்துசேர்ந்த புதிய மாணவர்கள்வாங்குகின்ற மதிப்பெண்களைமாணிக்கத்துடன் ஒப்பிட இயலாதேபுதிதாக வந்தவர்கள் புதுவெள்ள ஓட்டம்போலமிக அதிக மதிப்பெண்களும் பெற்றனரேஎல்லோரும் வியந்து போற்றினரேஎன்ன அதிசயம் நிகழ்ந்தேறியதோஇதுவரை அதிகமதிப்பெண்கள் பெறாதமாணிக்கமும்அதிக மதிப்பெண்கள் பெற்றான் தமிழ்ப்பாடத்திலேஓரிரவில் பணக்காரனான ஏழைபோல் ஆனாலும்ஏனோ எவருமே போற்றவில்லைஇதைக்கண்ட மாணவர்கள் மத்தியிலேஎன்ன விந்தையென கேள்வியெழஆசிரியர் மனது வைத்தால் அற்புதமும் நிகழுமென்று உணர்ந்தனரேஏனைய பாடத்திலும் இவ்வதிசயம் நிகழுமென எதிர்பார்த்தனரேஇதபோன்றே மதிப்பெண்கள் பெற்றுமிரள வைப்பானென காத்திருந்தனரே
எங்கு இத்திறமையை இதுநாள்வரைமறைத்து வைத்திருந்தானோ யாமறியோம்இன்றுதான் ஆசிரியர் இதனைக்கண்டாரோ என்பதையும் யாமறியோம்இன்னும் சில மாணவர்களையும் இதுபோல காண்பாரோ என்றறியோம்பூனையும் கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போயிடுமோபழுத்த கனிகள் மரத்தில் பல இருந்தால்பலரது பார்வை அதில் நிற்கும்பள்ளியின் நற்பெயரை மனதில் கொண்டால்நயமது காண்பதில் சிறந்து நிற்கும்காயைக் கனியென சொல்லி புகழ்ந்தாலும்காண்பவர் கண்களெலாம் பழுதன்றோ?நல்லோர் ஒருவருண்டேல் அனைவருக்கும் பெய்யும் மழை என்பார்இவ்வாசிரியர் ஒருவராலே இங்கு மாணிக்கம் மட்டும் உயர்ந்து நிற்பது எதனாலோ?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()