கவிதைகள்

கோலோச்சி நிற்பதே அத்தாட்சி!… கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

பகுத்தறிவுக்கு விதையிட்டதை பகுத்துமே அறிந்திடில்தொகுத்தது எவ்வமைப்போ எவரோ அல்ல என்றறிவீரேஇகத்தில் ஊர்வன பறப்பன நடப்பனவற்றை கடவுளாக்கிவகுத்ததை வழியென வாழ்ந்தால் எவரோ வீடுபேறென்றார்மதங்கள் தோன்றிய காலந்தொட்டு புவியில்மறுத்துரைத்த மாந்தருண்டாம் மாநிலத்தேநட்ட கல்லை தெய்வமென்று சொன்னதைதிட்டமாகச் சாடினார் சிரத்தையோடவரும்ஆயிரம் கவிதைகள் இங்கே வடித்தாலும்இதற்கொப்ப உண்மையினை உரைக்கஅறிவுக் கண்களை நன்றாயிங்கு திறக்கஉதவும் கவிதையை நானுமே தேடினேன்தேடித்தேடி நானும் சோர்ந்திட்டேன்தென்பட்டதில்லை என் கண்ணிலும்இன்றொரு அதிசயமும் நிகழ்ந்ததேஎன் வாழ்வில் வசந்தமாய் புகுந்ததேஅத்தி பூத்தாற்போல் என்று சொல்வதுபோல்பொத்தி வைக்காது மெய்ப்பொருள் வைத்துநெத்தியடிபோல் நெறிதனை நின்றுரைத்துஇத்தரையிலும் ஓர் இலக்கினைச் செய்தார்பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலையாய்உள் உணர்வை சொல்லும் வேலையாய்சொல்லாட்சியில் நற்கவிதையும் செய்தேகோலோச்சி நிற்பதுவே இங்கு அத்தாட்சி!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *