பலதும் பத்தும்

மேற்கு வங்காளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கம்யூனிஸ்டு பிரசாரம்

கணினித் தொழில் நுட்பத்தில் ஏ.ஐ எனப்படும் (ஆர்டிபிஷியல் இன்டலி ஜன்ஸ்) செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அரசியலிலும் புகுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிரசாரத்திற்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை கம்யூனிஸ்டு கட்சி பயன்படுத்தி உள்ளது. தனது முகநூல் பக்கம் மற்றும் யூ.டியூப் சேனலில் பிரசாரத்திற்காக தொகுப்பாளர் சமதாவை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பிரிவு 6 மாதங்களுக்கும் மேலாக இதனை சோதனை ரீதியாக பயன்படுத்தி உள்ளது. தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது. பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், இந்த மாதிரி பேச்சு கம்யூனிஸ்டுக்கு ஒத்து வராது. கம்ப்யூட்டரை மூடியவர்கள் இன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.

பா.ஜனதா தலைவர் சின்கா கூறும்போது, ஏ.ஐ. நன்மை செய்யாது. சி.பி.எம். முன்பு தொழில்நுட்பத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தை பின்னுக்கு தள்ளியது. தற்போது தொழில் நுட்பத்தை எதிர்கொள்வது முரண்பாடானது என்றார்.

இதற்கு பதில் அளித்த கம்யூனிஸ்டு கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, கணினிகளை செயல்படுத்துவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் எதிரானது அல்ல என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.