கவிதைகள்

மரபுக்கவிதை எனும் ஒப்பனையுடை மங்கை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

மரபுக் கவிதையாய் கவிதைசொல்லதரவென பெரிதாயேதும் தடயமின்றிசொந்த விதிசெய்தே நான் படைத்தவிந்தைக் கவிதையிதைக் கேட்பீரேகூந்தலில் கொஞ்சம் எண்ணெய்பூசிபாந்தமுடன் அழுத்தியே தலைவாறிஇறுக்கமாய் கூந்தலை பின்னலாக்கிமுறுக்கி பின்னிய கூந்தல் பின்னாடதொங்கியாடும் அழகிய சடைமுடிவில்அங்கே ஆடுகின்ற குஞ்சம் மிக அழகுதலைமுடி அழகுற தனி ஆபரணங்கள்தலை வகிட்டிலும் அழகு நெற்றிச்சூடிமுடிக்கு முடிவிலா அழகைச் சேர்க்கஅடி நுனிவரை பின்புறம் அழகூட்டிவண்ண மலர்கள் சான்றாய் நிறைத்துபெண்ணும் மலராய் மலர்ந்திருப்பாள்மஞ்சள் பூசி குளித்த மதிவதனமதில்மிஞ்சிடும் நெற்றிக்கு அழகு சேர்க்கதண்ணிய குணமுடைய சந்தணமாம்பண்பாக திலகமும் சேர்ந்ததழகாம்திருத்திய முழுப் புருவங்கள் கீழாகவருத்தும் கண்களிலே மையும் தீட்டிகூரிய நாசியின் இருபுறமும் அங்கேசீர்மிக்க அழகாய் இரு மூக்குத்திகள்நாசியினடி மறைந்தும் அழகூட்டுகிறஊசிமயிர்தனை மழித்து அழித்திடாதுஆசியொடு ஒரு புல்லாக்கு அழகூட்டபூசிய வர்ணம் செவ்விதழினில் அழகுஇரு செவி மடல்களிலும் மாட்டியொடுதருகின்ற அழகை கூட்ட தோடுகளாம்குண்டலங்களும் தனியொரு அழகாய்கண்டிட வியந்திடும் முகமும் அழகாம்கச்சிதமாய் அழகூட்டும் மேல் உடுப்புமெச்சியே ஒட்டி உறவாடிட பட்டாடைபட்டாடைமேல் அழகான ஒட்டியாணம்கட்டுடல் கவர்ந்திழுக்கும் அவள் அழகுஇருகைகளி்லும் எழிலூட்ட வளையல்பெருமிக்கும் விரல்மெச்ச மோதிரங்கள்மொத்தமாய் பொய்நகமும் பூச்சுடனும்சித்திரப் பாவையின் விரல் நகமுமழகுஉள்ளங்கைகளை மருதாணி அழகூட்டகள்ளமின்றி சொல்லும் கையழகென்றுதெள்ளுதமிழக்கு இலக்கணம் போல்கிள்ளையவள் பேச இலக்கு செய்வாள்பாதங்களில் ஒலிக்கும் கொலுசுகளும்பேதமின்றி பறைசாற்றும் விரலணியும்பாவையாய்ப் பார்த்து வியந்து போற்றபூவையும் வந்தாள் மரபுக் கவிதையாகமரபுக்கவிதை என்று மார்தட்டி நின்றுகரவின்றி செப்புகின்ற மாந்தருக்கும்ஒன்று சொல்வேனிங்கு உறுதியொடுநன்றே உங்கள் கூற்று என்ற போதும்மரபுக்கவிதை ஒப்பனை செய்த மங்கைமரபான எதுகை மோனை கொண்டவளேசீர் தளை ஓசையென பட்டுடையணிந்துஊர்வலம் வாராதுபோயின் மிளிர்வாளோஇயல்பு கவிதையது இயல்பான நங்கைஇயல்புடன் மிளிர்வாள் ஒப்பணையின்றிபுறவழகு ஒதுக்கிவிட்டு அகவழகு காட்டிஅனைவரையும் ஈர்த்திழுக்கும் பேரழகிஅளவிலா அலங்கார மரபுக் கவிதை அழகுஎளிமையாய் இலங்கும் மங்கை தனி அழகுஎன்றோ ஒருநாள் மரபுக்கவிதையும் அழகுஎன்றும் எளிமையான மங்கையும் ஓர் அழகுமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் என்றவலியுறு வள்ளுவன் வழியது காண்கிற்பின்கீழிருந்தும் கீழல்லார் கீழல்லர் என்றிங்குஅழிவின்றி பொருள் சொல்லின் சிறக்கும்!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.