கவிதைகள்

தமிழா நீ வாழ்க!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

செவியில் இனிமையாக விழும் ஒலிஅதுவன்றோ குயில் எழுப்பும் இசைஇயற்கையிலன் இலவசம் அவ்விசைகண்களுக்கு விருந்தளிக்கும் ஆடல்மயில் தோகை விரித்தாடும் ஆடல்பணம் கேட்காது  தனதாடலுக்கு மயில்உயிர்வாழ மூச்சுவிடக் காற்று உதவம்இயற்கை நாம்வாழ அளித்த நற்கொடைஅதுவும் விலையான மருத்துவமனைதாகம்தீர்க்க தடையின்றி கிடைத்த நீர்தருவதோ மழையால்  இயற்கைத் தாய்அதையும் விலங்கிட்டு அடைத்த மனிதர்மழழை தொடங்கி மாயும் வரை தமிழ்மந்திரம்போல் என்னை மயக்கிய தமிழ்அதுவும் பலதோற்றமதில் விலையானதுதமிழுக்கு நிகரான ஒன்றென்றாலது தாய்அந்தத் தாயையும் காலம் வாடகைக்குதரதமிழ்த் தொண்டும் விற்பனையானதும் ஏன்படைப்பையெலாம் பணமாக்கும் மனிதாநாம் உயிரென நினைத்திடும் தமிழையும்பணமாக்கும் வித்தைகண்ட தமிழா வாழ்க!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *