நாவல்கள்

காதலர் விமானம்!.. (தொடர்:15) ஏலையா க.முருகதாசன்.

‘இவளுக்கு இந்த துணிச்சலை யார் கொடுத்தது. அமைதியான பிள்ளையாகத்தானே வந்து போனால்.இவள் சந்திரனை மனதில் வைத்துத்தான் இந்த வீட்டில் உரிமை கொண்டாடினாளோ.பககத்து வீட்டுக்காரி அர்ச்சணாவின் தந்தை எனக்கு தூரத்து தம்பி முறைதான்.நான் அக்கா முறையென்று அவனுக்கும் தெரியும்.ஒரு வேளை வீட்டிலையிருந்து குடும்பமாக கதைக்கும் போது சந்திரன் அர்ச்சணாவிற்கு மச்சான் முறையாகும் சொல்லியிருப்பார்களோ’ என யோசித்த மகேஸ்வரி சுவரோடு சாய்ந்திருந்து எதுவுமே நடக்காதது போல தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணாவைப் பார்ப்பதும் தலையைத் திருப்பி வேறு பக்கமாக பார்ப்புதுமாக இருந்தாள்.சிவகாமி பிரம்புசாய்வுக் கதிரையில் இருந்படி கடைக்கண்ணால் அர்ச்சணாவைப் பார்த்தபடி தேத்தண்ணியைக் குடித்துக் கொண்டிருந்தாள்.அறையைவிட்டு வெளியே வந்த சந்திரன் ஒரு கிழமைக்கு முந்தி எதுவுமே நடக்காதது போல சுவரோடு சாய்ந்து தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணாவைப் பார்த்ததும் மீண்டும் அறைக்குள் போய்விடுகிறான்.

ஒரு கிமைக்கு முந்திவரை அர்ச்சணா பற்றி அவன் எதையுமே நினைக்கவில்லை.ஒரு கிழமைக்கு முந்தி நடந்த சம்பவத்திற்குப் பின் அவன் மனதில் அர்ச்சணா மெதுமெதுவாக இருப்புக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

தான் வியர்த்து விறுவிறுத்து ஸ்கந்தா மைதானாத்தில் நின்ற போது ‘ வியர்வையைத் துடையுங்கள் ‘ என்று சாந்தினி கொடுத்த கை;குட்டையை இன்னும் அவன் பவுத்திரமாக வைத்திருக்கிறான்.அதை அவன் எறியவில்லை.அவன் அதை விரும்பி வைத்திருக்கிறான்.அறிமுகமே இல்லாத ஒருத்தி துணிச்சலாக நடு மைதானத்தில் வைத்து கைக்குட்டையைக் கொடுத்ததை நினைத்து இதுநாள்வரை அவளின் உயரமும் அழகும் அவன் மனதை குழப்பிக் கொண்டிருக்க, திடீரென்று ‘நான் பெரிய பிள்ளையாகும் முன்பே எனக்குக் காதல் கடிதம் தந்தவர்’ என்று எந்தப் பதட்டமும் இல்லாமல் துணிவாக பொய் சொன்ன அர்ச்சணாவின் நினைப்பை தவிர்க்க முடியாமல் அவன் தவித்தான்.இந்தக் குழப்பமான சூழ்நிலையிலும்கூட ‘கடைசியிலை என்ரை நிலைமை முருகன்ரை நிலைதானோ வள்ளி தெய்வானையாய் இதுகள் வந்திடுமோ’ நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தனது மகனின் மனதில் சாந்தினி என்றவளின் நினைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட சச்சிதானந்தம்,அர்ச்சணா வந்து போவதையும் கவனித்துக் கொண்டுதானிருந்தார்.தங்களுடைய மகன் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பச்சிளங்குழந்தைக் குணம் கொண்டவன் என்றும் அவர் நினைக்கவில்லை.அந்தக் காலத்துப் பொடியனாக இருந்து தானும் விடாப்பிடியாக மகேஸ்வரிமீது விருப்பம் கொண்டு காதலிச்சு கல்யாணம் செய்ததை நினைத்துக் கொண்டார்.தனது மகன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பவனாகக்கூட இருக்கலாம் ஆர் கண்டது எவனெவன் எப்படி என்று நினைத்துக் கொண்டார்.

பக்கத்து வீடென்றாலும் சச்சிதானந்தமோ மகேஸ்வரியோ அடிக்கடி அங்கு

போவதில்லை.மாதத்தில் ஒருமுறையோ இருமுறையோ போய்க் கதைத்துவிட்டு வருவார்கள்.அர்ச்சணா வீட்டுக்காரர்களும் அப்படித்தான்.அர்ச்சணாவின் வீட்டைக் கடந்துதான் இவர்களின் வீட்டுக்குப் போவதால் யாராவது படலையடியில் தென்பட்டால், படலையடியில் நின்று கதைத்தவிட்டு மகேஸ்வரி போவதுண்டு.

ஆனால் அர்ச்சணா ஒவ்வொரு நாளும் சச்சிதானந்தம் வீட்டுக்கு வருவாள்.அவர்களின் வீட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டாள்.சகோதரியாக பழகுகிறானே என்று சொன்ன பொடியங்களும், அண்ணை போலப் பழகுகிறேன் என்று சொன்ன பொட்டையளும் பிறகு காதலர்களாக மாறிய கதைகள் நிறைய உண்டு.

அர்ச்சணா ஒரு கிழமைக்கு முந்தி நடந்து கொண்டதை அவளின் வீட்டுக்கு முச்சுவிடக்கூடாதென்பதை தாயும் தகப்பனும் சிவகாமிக்கு சொல்லியிருந்தார்கள்.சேற்றிலை எறிந்த கல் மாதிரி அந்த சம்பவம் சச்சிதானந்தம் வீட்டோடு அமந்து போய்விட்டது.

சுவரோடு சாய்ந்திருந்து தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்த அர்ச்சணா ‘சிவகாமி வாற சனிக்கிழமை படத்திற்குப் போவம், மாமி நீங்களும் வாறியளா’ என்று அர்ச்சணா கேட்க , அவள் கேட்ட வேகத்திலேயே ‘நான் வரேலை’ என்கிறாள் மகேஸ்வரி.

ஒரு கிழமைக்கு முந்தி இவ்வளவு நடந்தபிறகும் எதுவுமே நடக்காதமாதிரி எப்படி இவளால் இருக்க முடிகிறது,நான்தான் வாய்க்காரி இடக்குமுடக்கான ஆளென்று பெயரெடுத்தவள், என்னையும் மிஞ்சி நிற்கிறாளே.இது போதாதென்று அரேபியக் குதிரைமாதிரி ஒருத்தி அண்ணைக்கு வியர்வை துடைக்கவென்று நடுமைதானத்துக்கு நடந்து வந்து எவருக்கும் பயப்படாமல் கைக்குட்டை குடுத்திட்டுப்; போறாள்.அரேபியக் குதிரையாலும் இவளாலும் இனி என்னென்ன நடக்கப் பொகுதோ தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியிடம்’மறக்காதை வாற சனிக்கிழமை படத்துக்கு போறம் கேட்குதா வாயைத் திறந்து ஓம் என்று சொல்’ என்கிறாள் அர்ச்சணா.’வாறன்’ என்று மெதுவாகச் சொன்ன சிவகாமி’ அப்பா போகவா’ எனத் தகப்பனைப் பார்த்துக் கேட்க’ம்’ என்கிறார் சச்சிதானந்தம்.’என்ன மாமா போகாதை என்று சொல்வார் என்று நினைச்சியோ மாமா அப்படிச் சொல்லவே மாட்டார்’ என்று சொல்லியபடி தேத்தண்ணி குடிச்சு முடிச்ச தேத்தண்ணிக் கோப்பையை வைப்பதற்காக அடுப்படியை நோக்கிப் போகிறாள் அர்ச்சணா.

அவளின் செய்கையை வெறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் சச்சிதானந்தம் குடும்பம் இருதலைக் கொள்ளியெறும்பாக திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.அர்ச்சணா மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடக்கிறாள் என்பது எல்லாருக்கும் புரிந்த போதிலும் அவள் ஒரு கிழமைக்கு முந்தி தங்களுடன் நடந்து கொண்ட விதம்பற்றி அர்ச்சணாவின் தாய்தகப்பனிடம் எதுவுமே சொல்ல சச்சிதானந்ததம் குடும்பத்திலுள்ள எவருமே விரும்பவில்லை.குமர்ப்பிள்ளை விசயத்தில் அவசரப்படக்கூடாது என்பதற்காக அப்படியே இருக்கட்டும், கவனிக்காத மாதிரி இருப்போம் என்பது போல இருந்துவிட்டார்கள்.

அர்ச்சணாவின் குணம் ஏன் இப்படி மாறினது என்பதில் சிவகாமிதான் அதிகம் அதிர்ந்து போனாள். தான்தான் வாயாடி எடக்குமுடக்காக கதைப்பவள் என்று ஊருக்குள் பெயரெடுத்த தன்னையே மிஞ்சிவிடுவாளோ என எண்ணினாள்.

தேத்தண்ணிக் கோப்பையை அடுப்படிக்குள் வைத்துவிட்டுத் திரும்பியவள் ‘வாறன்’ என்று பொதுவாகச் சொல்லியவள் சிவகாமியைப் பார்த்து ‘சனிக்கிழமை படத்திற்கு போறதை மறக்காதை’ என்று சொல்லிவிட்டு அவர்களின் வீடடைவிட்டுப் போகிறாள்.

‘நீ அவளுடன் போகப் போறியா’ என்று சிவகாமியைப் பார்த்து தாய் கேட்க’ ‘போகட்டுமே இப்ப என்ன நடந்தது எதையும் தூக்கிப் பிடிக்காமல் விட்டால் தானாக இல்லாமல் போய்விடும்’ என்கிறார் சச்சிதானந்தம்.

————

தெல்லிப்பழையிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வரும்; போது எதுவும் பேசிக் கொள்ளாதவள் மல்லாகத்தைக் கடந்து சுண்ணாக எல்லைக்குள் பேருந்து நுழைந்து கொஞ்சத் தூரம் ஓடிக் கொண்டிருக்கையில் வலது பக்கத்து வீட்டைக் குத்திட்டுப் பார்த்து’ இந்த வீட்டுக்கு குண்டு வைக்க வேண்டும்’ என்று சிவகாமிக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக கோபத்துடன் கொல்கிறாள்.திகைத்துப் போன சிவகாமி ‘யாருடைய வீடு இது’ என்பதற்கிடையில் பேருந்து அந்த வீடடை கடந்துவிடுகிறது.’அந்த வீட்டிலைதான் ஸகந்தாவிலை படிக்கிற அரேபியக் குதிரையை வளர்க்கினம்’ என்கிறாள்.

அர்ச்சணா யாரைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சிவகாமி எதுவுமே பேசாதிருக்கிறாள்.முகத்தைத் திருப்பி அந்த வீட்டை பார்க்கிறாள் வீட்டுக்கு முன்னாள் ஒரு சேமசெற் கார் நிற்பது பேருந்தின் வேகத்தினாள் சாதுவாகத் தெரிகிறது. அவர்களிடம் காரும் இருக்கிறது போல என சிவகாமி நினைக்கிறாள்.

தியேட்டரில் முதலாம் வகுப்பின் முன்வரிசையில் சிவகாமியும் அர்ச்சணாவும் இருக்க, அவர்களுக்குப் பின்னால் நாலைந்து பொடியங்கள் வந்து இருக்கினம்.அவர்கள் உதைபந்தாட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் என்பதை அவர்கள் கதைத்துக் கொண்டிருந்ததிலிருந்து அறிய முடிந்தது.சிவகாமியம் அர்ச்சணாவும் காதைகூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.அவர்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் என்பதை’ கொக்குவிலோடு மார்ச் வரட்டும்’ அவைக்குப் பாடம் படிப்பிப்பம் என்கிறான் ஒருவன்.அவர்கள் கொக்குவில் இந்துக் கல்லூரிப் பொடியங்கள் என்பது அவர்களின் கதையிலிருந்து தெரிய வருகிறது.

‘ஸ்கந்தாவிற்கு ஒரு கோல் போட்டு மகாஜனாவை வெல்லச் செய்த அந்த பிளேயர் டேய் அவன்ரை பேர் என்னடா’ என்று ஒருத்தன் கேட்க ‘சந்திரன்ரா’ இன்னொருத்தன் சொல்ல, மற்றவன் ‘இனிமேல் அவன் மார்ச்சே விளையாடாத மாதிரி காலை முறிக்கவேணும்’ என்கிறான்.அதைக் கேட்டதும் சிவகாமி’ டேய் யாற்றை காலையடா

முறிப்பாய்’ என்று வேகமாக எழுந்து சொன்னவனின் சட்டையை பிடிக்க, அர்ச்சணா’விடடி’ என்கிறாள்.’என்னத்தை விடுகிறது, என்ரை அண்ணையின்ரை காலை முறிப்பன் என்கிறான் என்னைச் சும்மா இருக்கச் சொல்றியா’ என்கிறாள்.அதில் ஒருத்தன் எகத்தாளமாக ‘ ஓகோ அவனின் தங்கச்சியா நீ அதுதான் பொத்துக் கொண்டு கோபம் வருதோ’ என்றதைக் கேட்டதும் அர்ச்சணா’ கதையை நிற்பாட்டுங்கோ மார்சசென்றால் விளையாடி வெல்ல வேண்டும் காலை முறிக்கிறன் கையை முறிக்கிறன் என்று சொல்லக்கூடாது’ என்று சொல்ல ‘நீ யார் அவன்ரை லவ்வரோ’ என்கிறான் அவர்களில் ஒருத்தன்.’ஒமடா நான் அவன்ரை லவ்வர்தான் அதுக்கு இப்ப என்ன’ என்று கேட்க, ‘அதுதான் மச்சாளும் மச்சாளும் சேர்ந்து படத்துக்குவந்தனிங்களோ’ என்று நக்கலடிக்க.படம் தொடங்குவதற்கான முதல் மணி அடிக்கிறது.

சிலர் விசிலடிக்கிறார்கள்.சிலர் ‘உங்கடை சண்டையை வெளியிலை வைச்சிருங்கோ, நாங்கள் காசு கொடுத்து நிம்மதியாய் படம் பார்க்க வந்திருக்கிறம் என்று சிலர் சொல்ல.’பொம்பிளைப்பிள்ளையள் மாதிரியே இரண்டும் நடக்குதுகள்ஈ ஒரு பயமும் இல்லாமல் ஆம்பிளைப்பிள்ளையின்ரை சட்டையைப் பிடிக்குது அந்தக் காந்தாரி’ என்று ஒரு பொம்பிள சொல்லஈ ‘விசர்க்கதை கதையாதை தமையன்ரை காலை முறிப்பனென்றால் ஆருக்கும் கோபம் வருந்தானே என்கிறாள்’ இன்னொரு பொம்பிளை.

பொடியங்களும் சிவகாமியும் அர்ச்சணாவும் எழுந்து நின்று வாக்குவாதப்பட, ‘வெளியிலை போங்கோ இல்லாட்டி சண்டை பிடிக்காமல் இருங்கோ’ என்று ஒருவர் எழுந்து வந்து சமாதானப்படுத்துகிறார்.சிவகாமியினால் சேர்ட்; பிடிக்கப்பட்ட பொடியன், அவளுக்கு அடிக்க கையை ஓங்க, யாருமே எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.கலவர பூமியாகிறது தியேட்டர்…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.