உலகம்

அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் ; ​​நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்; ஈரானை மிரட்டும் டிரம்ப்

ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தெஹ்ரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உடன்பாடு எட்டப்படாவிட்டால் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்
மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது ஏனென்றால் அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் வரும். அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் வரும் என்று டிரம்ப் கூறினார்.

அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களின் அனைத்து மின் நிலையங்களையும் செயலிழக்கச் செய்வோம். அவர்களின் அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்கத் தாக்குதல்கள் எவ்வளவு காலம் தொடரும் என்று கேட்கப்பட்டபோது, ​​நான் போதும் என்று சொல்லும் வரை அவை தொடரும் என்று டிரம்ப் பதிலளித்துள்ளமை உலகில் மீண்டும் போர் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button