உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவு ; உயிரிழப்பு 4,734 ஆக உயர்வு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த அனர்த்தத்தில் இதுவரை 4,734 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16,740 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டுத் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகளும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளும் அரசாங்கம் மற்றும் மீட்பு அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button