இலங்கை

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, ரத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹாரே, நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட ஆகியோர் தங்கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்து, அதன்படி தங்கள் ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் கட்சிக்குள் உள்ளக நெருக்கடிகள் பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துள்ள நிலையில், உள்ளூராட்சி பிரதிநிதிகள் நியமனம் தொடர்பான சிக்கல் நிலைமையை அந்த நெருக்கடிகளின் மற்றொரு நீட்சியாகக் காணலாம்.

அதன்படி, இந்த அமைப்பாளர்கள் தங்கள் அமைப்புப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமாகி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சித் தலைமை எடுத்த முடிவுகளால் மேலும் பல தொகுதி அமைப்பாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகள் குறித்து முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும, கட்சியின் விதிகளின்படி அனைவரும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button