உலகம்

கிரீஸ் நாட்டில் 700 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்; கவலையில் எலான் மஸ்க்

கிரீஸ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி தொழிலதிபர் எலான் மஸ்க் கவலை வெளியிட்டுள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இல்லாததால், கிரீஸ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட பாடசாலைக் மூடப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டி எலான் மஸ்க் கவலை தெரிவித்தார்.

“கிரீசின் மரணம்” என்று தலைப்பிட்டு எழுதிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்கள் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட நாடுகளில் கிரீஸ் ஒன்று என்று கூறியுள்ளார்.

மக்களுக்கு விரைவாக வயதாகி வருகின்றது.. அதே நேரத்தில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கிரீசை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் மஸ்க் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *