உலகம்

சீனாவின் வலிமையை உலகிற்கு வெளிக்காட்டிய இராணுவ அணிவகுப்பு!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் சீன மக்கள் குடியரசின் இராணுவ வலிமை முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் இருந்த படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அணி வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தார்.

தியானன்மென் சதுக்கத்தில் நடந்த பிரமாண்டமான அணி வகுப்பின்போது சீனா, தனது இராணுவக் கிளைகளில் பல்வேறு வகையான புதிய மேம்பட்ட ஆயுத அமைப்புகளை காட்சிப்படுத்தியது.

இதன் மூலம் சீனா, அதன் அண்டை நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது.

ரஷ்யாவின் விளாடிமிர் புடின், வட கொரியாவின் கிம் ஜொங்-உன் மற்றும் பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு மெகா இராணுவ அணிவகுப்பில், சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஸ்டெல்த் விமானங்கள், அணுசக்தி திறன் கொண்ட கண்ட எதிர்ப்பு ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், பல்வேறு வகையான வான் மற்றும் நீருக்கடியிலான ட்ரோன்கள், அத்துடன் மின்னணு மற்றும் சைபர் போர் உபகரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது.

இருப்பினும், இந்த ஆயுத அமைப்புகளின் வீச்சு மற்றும் திறனை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

அவற்றில் பெரும்பாலானவை போரில் சோதிக்கப்படவில்லை, மேலும் அவற்றின் உண்மையான திறன்கள் குறித்து மிகக் குறைவாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், இராணுவத்தினர் மற்றும் நிபுணர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் ஆயுதங்களில் அடங்கும்.

YJ-15 தவிர, மீதமுள்ள மூன்று ஏவுகணைகளான YJ-19, YJ-17 மற்றும் YJ-20 ஆகியவை ஹைப்பர்சோனிக் வேகத் திறன் கொண்டவை என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் விமானங்கள், மேற்பரப்பு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பல தளங்களில் அவற்றை எடுத்துச் செல்ல முடியும் என்று குளோபல் டைம்ஸ் கூறியது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *