திபெத்திய பாடகர்களைக் கைது செய்தும் ஸ்தூபிகளை அழித்தும் வருவதாக சீனா மீது குற்றச்சாட்டு

14 ஆவது தலாய் லாமாவின் 90 ஆவது பிறந்தநாளை உலகெங்கிலும் உள்ள திபெத்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் ஆதரவாளர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்திற்குள் இந்த முக்கியமான நிகழ்வை மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் கொண்டாடிய அதே வேளையில், அது தீவிரமான பயத்தையும் மிருகத்தனமான அடக்குமுறைகளையும் அந்த நாடு சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை (CPC), தலாய் லாமாவுக்கு அஞ்சலி செலுத்துவது அரசியல் எதிர்ப்பின் செயலாகும். திபெத்தியர்களைப் பொறுத்தவரை, அத்தகைய ஆன்மீக வெளிப்பாடு கண்காணிப்பு, தடுப்புக்காவல், சித்திரவதை அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமைதி மற்றும் மரபின் கொண்டாட்டமாக இருக்க வேண்டிய விடயம், திபெத்திய அடையாளத்தை அழிக்கவும், எந்தவொரு குறியீட்டு எதிர்ப்பையும் நசுக்கவும் சீனா மேற்கொண்ட முறையான முயற்சிகளின் தெளிவான நினைவூட்டலாக மாறியது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலாய் லாமாவுக்கு எந்தவொரு விசுவாசத்தையும் “பிரிவினைவாத” நடத்தை என்று முத்திரை குத்தியுள்ளது. குறிப்பாக அவரது பிறந்தநாளில், சீனா தனது பிடியை இறுக்குகிறது. 2025 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், தலாய் லாமாவின் 90 வது பிறந்தநாள் நெருங்கிய போது , சீனப் படைகள் அம்டோ, காம், யு-சாங் மற்றும் தலைநகர் லாசா ஆகிய திபெத்தியப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டன. ஆலயங்கள் கடுமையான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டன.டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் ஆயுதமேந்திய பாதுகாப்பு இருப்பு ஆகியவை சிறிய கூட்டம் அல்லது பிரார்த்தனையைக் கூடத் தடுக்கின்றன.
ஏனைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஒடுக்குமுறை கடுமையானதாக இருந்தது. திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவிற்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார உறவுகளைத் துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட கைதுகள், மதக் கட்டமைப்புகளை இடிப்பது மற்றும் காணாமல் போதல் என்பன அதிகரித்துள்ளன.
நகாபா கவுண்டியைச் சேர்ந்த இளம் திபெத்திய பாடகர் அசாங்கின் வழக்கு, அடக்குமுறையின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2025 ஜூலை 2025 இல், தலாய் லாமாவுக்கு அஞ்சலி செலுத்தும் “அமைதியின் இளவரசர்” பாடலைப் பாடியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு நண்பர்களும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு எந்த உத்தியோகபபூர்வ குற்றச்சாட்டுகளோ அல்லது புதுப்பிப்புகளோ வழங்கப்படவில்லை.இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தெளிவற்ற மற்றும் தண்டனைக்குரிய நீதித்துறை அமைப்பின் உறைய வைக்கும் நினைவூட்டலாகும்.
அவரின் படங்களைப் பகிர்ந்ததற்காக, பிரார்த்தனைகளில் பங்கேற்றதற்காக அல்லது அவரது புனிதருக்கு மரியாதை செலுத்தும் வார்த்தைகளை உச்சரித்ததற்காக தனிநபர்களை குறிவைத்துள்ளன. தலாய் லாமாவைக் குறிப்பிடும் பாடலைப் பாடியதற்காக கியேக்ஜோம் டோர்ஜே 2024 இல் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டில், பிறந்தநாள் பிரார்த்தனைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக ஊடகக் குழுவில் பங்கேற்றதற்காக குன்ச்சோக் தாஷி மற்றும் டிசாபோ கைது செய்யப்பட்டனர். துன்புறுத்தப்பட்ட திபெத்தியர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.
2025 ஆம் ஆண்டில், அவரது 90 வது பிறந்தநாளுடன் இணைந்து, கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருந்தன.
கட்டுப்பாட்டை வலுப்படுத்த, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலாய் லாமாவின் உருவப்படத்தை பொதுவில் காட்சிப்படுத்துவதைத் தடை செய்துள்ளது. சில பிரார்த்தனைகளை சட்டவிரோதமாக்கியுள்ளது. சுவரோவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளை அழித்துள்ளது. பாரம்பரிய மதக் கல்வியை “தேசபக்தி கல்வி” என்று மாற்றியுள்ளது. திபெத்தியர்கள் இப்போது தங்கள் வீடுகளில் ஜி உள்ளிட்ட சீனத் தலைவர்களின் உருவப்படங்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் .
திபெத்திய அடையாளத்தை ஒழிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்த போதிலும், தலாய் லாமாவின் ஆன்மீக அதிகாரம் அசைக்கப்படாமல் உள்ளது.
![]()