காதலனை மணப்பெண் சந்தித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார்.

இந்த தகவல் மணமகனின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். அடாவடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மணமகனிடம் ஒரு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் மணமகனோ அவரை ஏற்க மறுத்து ஆவேசமாக பேசுகிறார்.

இதுதொடர்பாக விசாரித்தபோது காதலனை மணப்பெண் சந்தித்த தகவலை மணப்பெண்ணின் தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. மணமகள் கெஞ்சும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button