நிகழ்வுகள்
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் பெருந் திருவிழாவின் கொடியேற்றம் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றுள்ளது.
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
கொடியேற்றம்
திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர் உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளது.
மேலும், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீத்த திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

![]()