வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் மகன்…! முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு!!

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பின், இந்த வழக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். பின், இருவரையும் சமரச மையத்ததுதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தள்ளி வைத்தார்.
பின் 7 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று இருப்பதால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின், லண்டனில் உள்ள சங்கீதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.
![]()