முச்சந்தி
ராஜபக்சர்களின் சாம்ராஜ்யமும் அநுரவின் அதிரடியும்! … அநுர இப்படி ஒரு தலைவரா?

இலங்கை அரசியல் வரலாற்றில் நாம் பல ஆட்சியாளர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகைக்குப் பிறகு, இலங்கை அரசியல் தளம் ஒரு முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, இது ஒரு பண்பாட்டு மாற்றம் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள் என்பதை அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். 
———————————————————————–
இந்த ஆட்சியின் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது, ” சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும். ஒரு காலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப்பட்ட பெரும் அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என எவராக இருந்தாலும், தவறு செய்திருந்தால் அவர்கள் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்படும் காட்சியை மக்கள் இன்று காண்கிறார்கள். இது அரசியல் பழிவாங்கல் என்று ஒரு தரப்பால் விமர்சிக்கப்பட்டாலும், நீண்ட காலமாக நீதி மறுக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு இது ஒரு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
———————————————————————-
இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றில் ‘ இனம் ‘ மற்றும் ‘ மதம்’ என்பவை வாக்குகளைப் பிரிக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அநுர குமார திசாநாயக்க வின் வெற்றி இந்த பிம்பத்தை உடைத்துள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஒரு ‘ இலங்கையராக’ மக்கள் ஓரணியில் நின்று வாக்களித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. ஜனாதிபதி மக்களை இனம் பிரித்துப் பார்க்காமல், அனைவரையும் ஒரு நாட்டின் சக்தியாக, குறிப்பாக ‘ இளைஞர்களாக’ பார்ப்பது ஒரு முற்போக்கான அணுகுமுறை என மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
——————————————————–
ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவோ எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஒரு சிறிய விடயத்தைக் கூட பூதாகரமாக்கி மக்களின் கவனத்தை த் திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு காரணமாக, எதிர்க்கட்சிகளின் போலி பரப்புரைகள் மக்களிடையே எடுபடுவதில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
—————————————————————
இலங்கை அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரையே சட்ட ரீதியான கேள்விகளுக்கு உட்படுத்திய பெருமை அநுர குமார திசாநாயக்கவையே சாரும். ” சட்டம் தன் கடமையைச் செய்யும் ” என்பதை வார்த்தை அளவில் சொல்லாமல், செயலில் காட்டி வருவதே இவருடைய பலமாகப் பார்க்கப்படுகிறது.
மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றே ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் தென்படுவதாகப் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
———————————————-
எல்லா மதங்களையும் மதிக்கும் அதே வேளை, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தாத ஒரு தலைவராக இவர் பார்க்கப்படுகின்றார். இத்தகைய ஒரு தலைவர் நாட்டுக்குக் கிடைத்தது அபூர்வம் என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.
எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இலங்கைக்கு இந்த நியாயமான ஆட்சி ஒரு வரப்பிரசாதமாகும் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் இனி வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் இல்லை என்ற நம்பிக்கையை இந்த ஆட்சி விதைத்துள்ளது. எத்தனை சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் மக்களின் தெளிவான பார்வை இருக்கும் வரை அந்த அரசியல் மாற்றம் ஒரு தொடர்கதையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முகநூல்
![]()