உலகம்

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

ரஷ்யா அதிகாலையிலேயே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் காரணமாக நகர மையத்திற்கு அருகிலுள்ள, பலத்த சேதமடைந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்திற்குள் பொதுமக்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், ரஷ்ய ட்ரோன்கள் மீது உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உக்ரைனின் வரலாற்றுச் சிறப்புமிக்க போடில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக, கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கட்டிடத்தின் ஏழாவது மாடி முதல் ஒன்பதாவது மாடி வரையிலான பகுதிகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்று கிளிட்ச்கோ குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன்களின் சிதைவுகள்
மேலும், அதே பகுதியில் உள்ள இரண்டாவது குடியிருப்பு கட்டிடம் மீதும், சுமார் 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தின் பிற மாவட்டங்களிலும் ட்ரோன்களின் சிதைவுகள் விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை அன்று கீவ் நகரை நோக்கி ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் டஜன் கணக்கான ஏவுகணைகளையும் ஏவி நடத்திய தாக்குதலில், சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button