இலங்கை
கே.பியை சந்தித்தாரா சுரேஷ் சலே..! அம்பலமாகும் பெரும் இரகசியம்

தற்போது சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட பல அதிர்ச்சி தரும் இரகசியங்கள் மீண்டும் அம்பலத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சுரேஷ் சலே கே.பி என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதனை சந்தித்தாரா என கேள்வி எழுப்பும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும், ஆயுதக் கொள்வனவாளராகவும் இருந்தவர் தான் கே.பி.
2009 போரின் முடிவுக்குப் பின்னர் மலேசியாவில் வைத்து இலங்கை உளவுத்துறையினரால் சர்வதேசக் கூட்டுடன் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.
![]()