6 முறை இறந்து உயிர்த்த நபர் – அது எப்படி சாத்தியம்?

ஒருவர் ஆறு முறை இறந்து உயிர்பிழைத்துள்ளார். இதை எப்படி சாத்தியமானது என தற்போது பல கேள்வி எழுந்துள்ளது.

உயிர்த்த நபர்
உலகத்தில் பல ஆச்சரியமான விடயங்கள் நடக்கும். ஆனால் தற்போது வந்த விடயம் மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இஸ்மாயில் அஜிஜி உனும் நபர் ஒருவரின் கதை ஒரு விபத்தில் தொடங்கியதாக கூறப்படுகின்றது. ஆஃப்ரிமேக்ஸ் எடுத்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதன் படி,
இஸ்மாயில் அஜிஜி என்பது அலுவலகத்தில் இருந்தபோது பெரிய விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார். இதன்போது அவர் மோசமான நிலைக்கு சென்றுள்ளார்.
இதை அறிந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார்.
ஆனால் அந்த நபர் சவப்பெட்டியில் இருந்து தட்டி வெளியே வர முயற்ச்சித்துள்ளார். இந்த முதல் சம்பவத்திற்கு பின்னர் சரி இது எதார்த்தமாக ஏதோ ஒரு தவறான புரிதலால் நடந்துள்ளது என நினைத்துள்ளனர்.
இதன் பின்னர் இரண்டாவது தடவை இஸ்மாயிலுக்கு கடுமையான மலேரியா ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் மீண்டும் அவர் இறந்துவிட்டார் எனக் கூறினார். ஆனால் அவர் மீண்டும் உயிர் பெற்றுள்ளார்.
ஆனால் இதன் பின்னர் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. அதில் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அது மிகவும் மோசமான நிலை ஆனால் அதன் பின்னரும் அவர் உயிர்த்தெழுந்துள்ளார்.

இதன் பின்னர் இஸ்மாவை ஒரு விஷப்பாம்பு கடித்துள்ளர்து. குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டார் என நினைத்து, இறுதிச் சடங்கிற்குத் தயாராக ஆரம்பித்துள்ளார்கள்.
ஆனால் இவர் பல முறை உயிர்த்தெழுந்ததால் சந்தேகம் காரணமாக உடனே அடக்கம் செய்யவில்லை. 3 நாட்கள் கடந்த பிறகு அனைவரும் இவர் இறந்துவிட்டாரா இல்லையா என காத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர் 3 நாள் கழித்து அவர் மீண்டும் உயிர் பெற்றுள்ளார்.
இதன் பின்னர் எல்லோரும் அவரை கண்டு பயந்தனர். இந்த அனைத்து சம்பவங்களுக்கும் பிறகு அண்டை வீட்டார் அவரை ஒரு சாதாரண மனிதன் என்று இல்லாமல், ஏதோ மர்ம சக்தி கொண்டவன் போல நினைத்து அவரை தள்ளி வைத்தார்கள்.

ஒரு நாள் அவர் வீட்டில் தீப்பற்றியது. இஸ்மாயில் வீட்டுக்குள் இருந்தபோதும் அந்த பெரிய தீயிலிருந்து பத்திரமாக வெளியே வந்தார். இது அவர் மரணத்திலிருந்து மீண்ட 6வது முறையாகும்.
இப்படி தொடர்ந்து இஸ்மாயி உயிர்பிழைத்துக்கொண்டே இருந்தார். இதனால் இஸ்மாயில் அஜிஜி தன் பழைய வீடும், அங்கு இருந்த மக்களும் விட்டு தூரமாக, ஒரு வெறிச்சோடிய இடத்தில் வாழ ஆரம்பித்தார்.
இவருடைய கதை இன்னும் பேசு பொருளாதக மாறியது.
![]()