ஆஸ்திரேலியாவில் மக்களை நடுங்கவைத்த சிவப்பு வானம்

மேற்கு ஆஸ்திரேலியாவில் ‘சைக்ளோன் நாரெல்லே’ என்ற தூசுப் புயல் ஒன்று வீசி, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் வானம் முழுவதும் சிவப்பு நிறமாக காட்சியளித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
குறித்த புயலின் போது, சில நிமிடங்களிலேயே முழு வானமும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் மாறி உள்ளது.
பட்டப்பகலிலேயே இரவு போல் இருட்டாகி, தூசி மேகங்கள் எல்லா இடங்களிலும் படிந்துள்ளது.
காற்றுகூட மூச்சு முட்டும் அளவிற்கு அடர்த்தியாக மாறியதாகவும், வாகன ஓட்டுனர்கள் திக்கற்று நின்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், “வானமே வேற மாதிரி தெரிகிறது, உலகமே மாறிவிட்டது போல் இருக்கிறது” என்று நடுங்கும் குரலில் தமது அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இது இயற்கையான நிகழ்வா அல்லது காலநிலை மாற்றத்தின் தீவிர எச்சரிக்கையா என்று இணையத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
![]()