பலதும் பத்தும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 31 வயதுடைய இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இது இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேராசிரியர் டிரான் டயஸின் மேற்பார்வையில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரையிலான இரண்டு நிமிடங்களுக்குள் இந்தக் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டனர்.

தாய் மற்றும் ஆறு குழந்தைகளும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *