முச்சந்தி

அண்ணா நகர் தமிழ்ப் பேரவையின் தமிழ்ப்பேருரை

அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின் இலக்கியக் கூட்டமான, 21 9 25 ஞாயிற்றுக்கிழமை அளவில்மாலை 5 மணி சென்னை அண்ணாநகர் லியோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கியப் பேருரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பேராசிரியர் முனைவர் ரூபா எம்..ஏ., எம்.பில்., பி.எச்டி., அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட, அதை அடுத்து மதிப்பிற்குரிய பாவலர் சீனி பழனி அவர்கள் வரவேற்பு ஆற்றினார்கள். பின்னர் பேராசிரியர் முனைவர் மா. இளங்கோவன் ( தலைவர்) அவர்கள் மிகச் சிறப்பாகத் தலைமை உரையாற்றினார்கள். பின்னர் பேரவையின் இணைச் செயலாளரும், இந்துக் கல்லூரியின் பேராசிரியருமான,பேராசிரியர் முனைவர் ஜா. திரிபுர சூடாமணி அவர்கள், பெருங்கதை காப்பியம் தொடர் சொற்பொழிவின் தொடக்க உரையாக றற்யமிகச் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றினார்கள்.

பேராசிரியர் முனைவர் ம.இளங்கோவன் சிற்றுரை ஆற்றிய பிறகு, ஆவடி வேல்டெக் கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன் அவர்கள் இணையத் தமிழ் என்பது பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அவர் உரையாற்றும்
பொழுது, ”உலகளாவிய நிலையில், தமிழ் வளர்ச்சிநிலை பெற்றுள்ளதை தமிழ் ஆர்வலர்கள் இன்னும் வளர்க்க முயலவேண்டும்” என்றார். இணையத்தமிழ் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான இச்சொற்பொழிவில் பல துறைகளின் மேம்பாடுகள் விளக்கப்பட்டன.

பிறகு, பேராசிரியர் முனைவர் ரூபா அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள்.பின்னர் பேரவையின் ப் யங்தொண்டர் திலகம் திரு சுதாகர் அவர்கள் தனக்கே உரித்தான முறையில் பெருங்கதையின்பெருமையைப் பற்றியும், இணையத் தமிழ்ப் பற்றியும் பேசிய
பிறகு, நன்றி உரையாற்றினார்கள். இத்துடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. கூட்டத்தில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *