கவிதைகள்

காத்திடுவோம் வாருங்கள்!…. கவிதை…. ஜெயராமசர்மா

பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்

காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம்
இலக்கியத்தை இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்

image1.jpeg

 

 

 

 

 

 

 

பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
பண்பாடு கலாசாரம் பதறியே துடிக்கிறது

ஆன்மீகம் அறமெல்லாம் அழுதுமே நிற்கிறது
ஆளுமைகள் பலபேரும் அகவொழுக்கம் குன்றுகிறார்
கல்வியொடு மருத்துவம் காசுக்குள் அமிழ்கிறது
கண்ணியமும் கெளரவும் கலங்கியே அழுகிறது

மூத்தோரை யாவரும் மூலையிலே ஒதுக்கிட்டார்
அவருரைத்த அறிவுரைகள் ஆழவே புதைத்திட்டார்
பாட்டியெனும் பக்குவத்தை பாராமல் ஒதுக்கிட்டார்
பகட்டான வாழ்வையே பண்பாடாய் ஆக்கிட்டார்

image2.jpeg

மதங்கண்ட மனிதன் மனிதத்தை மறந்திட்டான்
இதமான வார்த்தைகளை ஈயவே தயங்குகிறான்
சூழலை மறக்கின்றான் சூதினை அணைக்கின்றான்
கலாசாரம் பண்பாடு கதிகலங்கி நிற்கிறது

image1.jpeg

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *