பலதும் பத்தும்

அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க மேலும் சில நாடுகள் பரிந்துரை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என மேலும் சில உலக நாடுகள் பரிந்துரை செய்து வருகின்றன.

அதன்படி, புதிதாக, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்துள்ளன.

முன்பதாக, பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா ஆகிய நாடுகள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பை பரிந்துரைத்த நிலையில் தற்போது புதிய சில நாடுகளும் பரிந்துரைத்துள்ளது.

எனினும், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடந்த போரை நிறுத்திய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button