பலதும் பத்தும்
வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திச்செடி இலைகள் பழுத்து உதிர்கிறதா?

செம்பருத்திச் செடியில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, செடியிலிருந்து உதிர்வது இயற்கையாக நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனாலும் அதை கவனத்தில் வைத்துக்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டு பிடித்து தீர்வு காண்பதும் அவசியம்.
செடிக்கு தண்ணீர் ஊற்றுவதில் கோளாறு அல்லது பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களாலும் இலைகள் பழுத்து உதிரலாம். தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றுதல் அல்லது குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றுவது இரண்டுமே பிரச்னையை உண்டுபண்ணும்.
தீர்வு: செடி வைத்திருக்கும் தொட்டியில் மேற்பரப்பு மண் காய்ந்து போகும்போது மட்டும் தண்ணீர் ஊற்றவும். ஊற்றிய நீர் அதிகமாகி, தொட்டியின் அடி பாகத்தில் தேங்கி நின்றால் செடியின் வேர் காற்றோட்டமின்றி, மூச்சுத் திணறி அழுகிவிட வாய்ப்பாகும்.
![]()