முச்சந்தி

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி அமோகமாகி இருக்கும்! – எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அட்வைஸ்

தான் அறிவுறுத்தியபடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் தெரிவிக்கையில்

குறிப்பாக கொழும்புக்கு இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும், தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்றார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம்.

சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன. நாம் திருப்தி அடையலாம்.

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

நான் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விஷயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன.

தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button