ஏப்ரல் 28 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் தங்கும் சனி பகவான்

சனி பகவானின் சில மாற்றங்கள் நேர்மறை பலன்களை கொடுத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அந்த வகையில் தற்போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ஏப்ரல் 28 வரையில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பதால் சில ராசிக்காரர்காரர்களுக்க துரதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

விருச்சிகம்

குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்கும். நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. திருமண வாழ்வில் பிரச்சினைகள் அதிகரிக்கும். மற்றவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவீர்கள். முன்னேற்றத்துக்காக கடினமாக போராட வேண்டிவரும். அனைத்தையும் பொறுமையாக கையாள வேண்டிய காலம். கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

கும்பம்

பண விடயங்களில் கூடுதல் கவனம் அவசியம். தேவையற்ற விடயங்களில் தலையிட வேண்டாம். மனம் புண்படும்படி நிறைய விடயங்கள் நடக்கலாம். தொழிலில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சம்பாதிக்கும் பணத்தை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உறவினர்களுடன் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபட வேண்டாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button