செல்லப்பிராணிக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கித் தந்த பெண்

தமது செல்லப்பிராணிக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கித் தந்துள்ளார் மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா.

‘டைகர்’ எனும் பெயருடைய நாய்க்கு அவர் தங்கச் சங்கிலி வாங்கிக் கொடுப்பதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

நகைக்கடையில் சங்கிலியை சல்தான்ஹா தேர்வுசெய்யும் வேளையில், அவருக்காக டைகர் காத்திருக்கிறது. அந்த நாயின் கழுத்தில் அவர் சங்கிலியை அணிந்துவிடும்போது அது உற்சாகத்தில் தனது வாலை ஆட்டுவதை அக்காணொளி காட்டியது.

சல்தான்ஹா வாங்கிய தங்கச் சங்கிலியின் எடை 35 கிராம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பகிரப்பட்ட அக்காணொளியைப் பார்த்த பலரும், சல்தான்ஹாவின் செயலைப் பாராட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button