திருப்பதியில் கமல் ஹசன் போட்டுள்ள செட் 2 ஆண்டவரை சந்திக்க உள்ள மக்கள் INDIAN 2…
வைகுண்ட ஏகாதேசி வர உள்ளதால், பல்லாயிரக் கணக்கான மக்கள் திருப்பதிக்கு படை எடுத்து வருகிறார்கள். ஆனால் அங்கே பெரிய செட் ஒன்றை போட்டு உலக நாயகன் கமல் படப்பிடிப்பை ஆரம்பித்து உள்ளார். ஜனவரி 22ம் திகதி வரை, படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகும். இதனால் மக்களின் தொல்லை யாஸ்த்தி இருக்குமே என்று இயக்குனர் சற்று யோசித்து வரும் நிலையில்.
எந்த ஒரு பிரச்சனையும் இன்றி கமல் அங்கே கூடாரம் போட்டு தங்கியுள்ளார் படு ஜாலியாக என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள். குறிப்பாக கமலை ஆண்டவர் என்று சிலர் அழைப்பது உண்டு. வைகுண்ட ஏகாதேசிக்கு மலையேறி பெருமாள் ஆண்டவரை வழி படும் மக்கள். அப்படியே கொஞ்சம் இறங்கி வந்து மற்ற ஆண்டவரையும் பார்த்து செல்ல முடிகிறது.
இது இந்திய 2க்கு பெரிய அளவில் புரோமோஷனாக இருக்கப் போகிறது என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்
![]()