கோவை ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை: போலீசார் விசாரணை!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் என்பது மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது என்பதும் இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் சினிமா பிரபலங்கள் உள்பட பலர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 வயது இளைஞர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யோகா மையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button