கவிதைகள்
உலகில் மக்கள் மனமெல்லாம் ஊனம் ஆகிக் கிடக்கிறது!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வரையறை யின்றிக் காவுகொள்ள 
வைரசு வடிவில் வந்திருக்கு
புவிலே உள்ளார் புலம்புகிறார்
புறப்பட்ட இடத்தைத் தேடுகிறார்
சீனா வென்று செப்புகிறார்
தானா வரவிலை என்கின்றார்
மருத்துவ உலகம் கலங்கிறது
மருந்துகள் காண ஓடுகிறார் !
அரசியல் ஆக்கிட முனைகின்றார்
ஆபத்தோ தினமும் பெருகிறது
பெறுமதியான மக்கள் உயிர்
பெருமையை இழந்து போகிறது
பொறுமையாய் இருங்கள் என்கின்றார்
பொறுமையைக் காத்திடப் பொறுமையிலை
இறுதியில் நடப்பது என்னவென
எவருமே புரியா திணறுகிறார் !
வறுமையால் வாடுறார் ஒருபக்கம்
வணிகத்தை இழக்கிறார் ஒருபக்கம்
விவசாயம் செய்வார் விளைபொருள்கள்
வீணாய் போவதால் வெதும்புகிறார்
உழைத்துப் பிழைக்கும் பலமக்கள்
உணவு கிடைத்தால் போதுமென்று
உருக்கு முற்று நிற்கின்றார்
உணரா கொரனோ பிடிக்கிறது !
ஆராய்ச்சி கூடம் ஓய்வின்றி
ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கிறது
கொரனோ தடுப்பு மருந்துமட்டும்
வரவோ இன்னும் மறுக்கிறது
வெளியில் கொரனோ வலைவிரித்து
சவாலை கொடுத்து நிற்கிறது
உலகில் மக்கள் மனமெல்லாம்
ஊனம் ஆகிக் கிடக்கிறது !
![]()