யாழ். மீனவர் மீது தமிழக மீனர்களின் தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் மீது தமிழக மீனர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு பாராடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸில் பதிவிட்ட அவர்,
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களால் நமது மீனவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட காட்சிகள் மிகுந்த கவலையளிக்கின்றன. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
அரசு தாமதமின்றித் தலையிட்டு, அவரது உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நான் வன்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம், வட மாகாணத்தைச் சேர்ந்த நமது மீனவர்களைச் சிறப்பாகப் பாதுகாக்க, வலுவான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்பதன் அவசரத் தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் பிரச்சினைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால், தமிழக காவல்துறையினர் முன்னிலையில் கூட, தமிழக மண்ணில் நமது மீனவர்கள் தாக்கப்பட்டபோது மௌனம் காக்கின்றனர் என்றும் அவர் கவலைை வெளியிட்டார்.
![]()