கவிதைகள்
சாதலுடன் போராடும் சனம்பார்த்து அழுதுநின்றாள்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மருத்துவராம் மாலாவை
மருத்துவமே விரும்பியது
மருத்துவமே விரும்பியது
தனக்கெனவே வழிதேர்ந்து
தளர்வின்றி பணிசெய்தாள்
அடுத்தவர்கள் படுந்துன்பம்
அவள்துன்பம் எனநினைத்தாள்
அன்பான மருத்துவராய்
அவளங்கே பணிசெய்தாள் !
அடுத்தவர்கள் படுந்துன்பம்
அவள்துன்பம் எனநினைத்தாள்
அன்பான மருத்துவராய்
அவளங்கே பணிசெய்தாள் !
நிர்வாகம் சொல்லுவதை
நெஞ்சுக்குச் சொல்லிடுவாள்
நீதியற்ற முறையிருந்தால்
நிராகரிக்க முற்படுவாள்
அதிகாரம் அவளிடத்து
ஆணவமாய் வருமாயின்
துணிவுடனே எதிர்கொண்டு
சரிவழியில் சென்றிடுவாள் !
கொரனோவின் தாக்கத்தால்
மருத்துவத்தை நாடிநின்றார்
அருகிருந்து மாலாவும்
ஆறுதலைக் கொடுத்திடுவாள்
தனக்குத் தொற்றுவருமென்று
நினைப்பிலவள் கொள்ளாமல்
காப்பாற்றும் எண்ணமதை
கருத்திருத்திச் செயற்பட்டாள் !
வீடுசெல்ல விரும்பாமல்
ஓடியோடி பணிசெய்தாள்
வேதனைகள் சோதனைகள்
விரும்பியவள் ஏற்றிருந்தாள்
காதல்நிறை கணவனுடன்
கணநேரம் கதைத்திடுவாள்
சாதலுடன் போராடும்
சனம்பார்த்து அழுதுநின்றாள் !
இரவுபகல் பாராமல்
ஏந்திழையாள் பணிசெய்தாள்
அவள்பணியின் பரிசாக
கொரனோவைத் தான்பெற்றாள்
பணிசெய்ய முடியாமல்
தனிமையிலே விடப்பட்டாள்
செய்திகேட்ட கணவனுமே
செயலிழந்து அழுதுநின்றான் !
முகம்றியா மதலையும்
மூன்றுவயதுப் பாலகனும்
கண்ணிறைந்த கணவனும்
கண்ணிரில் மிதக்கவே
மருத்துவத்தை உயிராக
மதித்துநின்ற அம்மங்கை
உயிரெடுக்க காலனாய்
வந்ததங்கே கொரனோவும் !
மருத்துவர்கள் அழுதார்கள்
மருத்துவமும் கலங்கியது
கொடுமைநிறை கொரனோவின்
கோரமதைக் கண்டவுடன்
பணிசெய்ய சென்றவள்
அணைத்துவிட்டாள் மரணமதை
அவள்குடும்பம் கண்ணிரில்
அமிழ்ந்துபோய் இருக்கிறதே !
![]()