முச்சந்தி

நாளை யாழ். செல்கிறார் பிரதமர்: நல்லூர் கோவிலில் வழிபாடு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார்.

இந்நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (கச்சேரி) நடைபெறவுள்ளது.

அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button