பலதும் பத்தும்
மஹிந்தவின், நெகிழ வைத்த முகநூல் பதிவு

“மக்களின் அன்பை விட ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயம் அரசியலில் வேறெதுவும் இல்லை,” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர் அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார். அந்த முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“தமது தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்காமல் இருப்பதை விடவும், இந்தப் பூமியில் பிறந்த ஒரு மனிதனுக்குப் பெரிய மகிழ்ச்சி வேறொன்றும் இருக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவர்கள் எனது மக்கள் மஹிந்தவின் மக்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.”
![]()