இங்கிலாந்தில் சீக்கிய சிறுமியை கடத்தி பலாத்காரம்; அறையை உடைத்து மீட்ட பொலிஸார்

மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி 16 வயதுடைய சீக்கிய சிறுமியை அந்த கும்பலை சேர்ந்த 30 வயதுடைய நபர் வீட்டுக்கு அழைத்து சென்று அறையில் அடைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
அந்நபருடன் வேறு 6 நபர்களும் அறையில் இருந்த நிலையில் அவர்களாலும் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். சீக்கிய சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பற்றி அறிந்த சீக்கிய அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் வீட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி சத்தம் போட்டு அந்த நபரை வெளியே வரும்படி கூறினர். எனினும், பதில் எதுவும் வராத நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், சிறுமியை வெளியே மீட்டு கொண்டு வந்தனர். வாலிபரையும் பிடித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி சீக்கிய அமைப்பின் தலைவர் ஜஸ்சா சிங், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில்,
தவிர, அந்த நபரை மற்றொரு 12 வயது சிறுமியுடனும் அந்த பெண் பார்த்துள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் யுக்திகளை பயன்படுத்தி அந்த நபர் செயல்பட்டு இருக்கிறார். இதனால், எங்களால் உதவ முடியவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை
அந்த நபரின் வீட்டை கடந்து ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் தினமும் செல்கின்றனர். அவர்களில் சிலரை இதுபோன்ற விசயங்களுக்கு அந்த கும்பல் பயன்படுத்தி கொள்கிறது என தகவல் தெரிவிக்கின்றது.
ரோதர்ஹேம், ரோச்டேல் மற்றும் டெல்போர்டு நகரங்களில் வெள்ளையின சிறுமிகளை திட்டமிட்டு நட்பு கொண்டு, கடத்தி, கும்பல் பலாத்காரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
பத்து ஆண்டுகளாகவே இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் அரசியல் ரீதியிலான சர்ச்சை விவாதங்களும் தொடர்ந்து வருகின்றன.
![]()