முச்சந்தி
ரணில் கைது: ஐ.நாவில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாகக் கூறி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் தடுப்புக்காவல் இந்த அரசாங்கம் செயல்படுத்தியுள்ள ஜனநாயக விரோத அரசியல் பழிவாங்கலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.
![]()