பலதும் பத்தும்

நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி.

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் நேற்றையதினம் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 வயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் உடலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button