உலகம்

பாகிஸ்தானில் திடீர் வெள்ளப் பெருக்கில் ஒரே குடும்பத்தில் 18 பேர் மாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குடும்பத்தினர், ஆற்றில் நின்று இயற்கைகயை ரசித்தவண்ணம் இருந்துள்ளனர். திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவர்களை வெள்ளம் சூழ்ந்துகொண்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை பிடித்தவண்ணம் தமது உயிரை காக்க போராடினார்கள்.

ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்கள்.

இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *