இலங்கை

2026 முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல்

எல்லை நிர்ணயம் போன்ற தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சவால்கள் போதுமான அளவு தீர்க்கப்பட்டு, உள்ளூராட்சி சட்டக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்து, பின்னர் அதை நிராகரித்த போது எழுந்த பிரச்சினைகளை குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதையும் மாகாண சபைகளை எல்லை நிர்ணயிப்பதையும் பரிசீலித்து வருகிறது.

இருப்பினும், உள்ளூராட்சி அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, அடிமட்ட மட்டத்தில் பொது சேவைகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு இந்த சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விவாதங்கள் தொடங்கியுள்ளன. தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *