முச்சந்தி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தமாகக் கொழும்பில் இந்தச் சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button