பலதும் பத்தும்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது.

இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், சந்​திர​யான் போன்ற பல்​வேறு திட்​டங்​கள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிலை​யில், விண்​வெளித் துறை​யில் தனி​யார் பங்​களிப்பையும் அனு​ம​திக்​கும் உத்​தரவை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு பிறப்​பித்​தார்.

இதையடுத்​து, 2022 ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் ‘விக்​ரம்​-எஸ்’ என்ற சப்​-ஆர்​பிட்​டல் வகை சிறிய ராக்​கெட்டை தயாரித்து வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தி​யது.

இதைத் தொடர்ந்​து, அந்த நிறு​வனம் தனது முதல் ஆர்​பிட்​டல் வகை ராக்​கெட்டை விண்​ணில் செலுத்​து​வதற்​கான திட்​டத்தை வடிவ​மைத்​தது.

அதன்​படி, ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் வடிவ​மைக்​கப்​பட்​டது.

ராக்​கெட் ஏவுதலுக்​கான இறு​திக்​கட்ட பணி​கள் முடிந்​ததை தொடர்ந்​து, இன்​-ஸ்​பேஸ் மற்​றும் இஸ்​ரோ​வின் ஒருங்​கிணைப்​புடன் ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து நேற்​று காலை 11.30 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட், விண்​ணில் செலுத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்தது.

இந்த பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்​பட்​டிருந்​தது.

நேற்று ஏவுதலுக்​காக ராக்​கெட் தயா​ராக இருந்​த​போது தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​ட​தால், கவுன்ட்​-ட​வுன் நேரத்தை தாண்டி கூடு​தலாக 35 நிமிடங்​கள் ராக்​கெட் புறப்​பாடு நிறுத்தி வைக்​கப்​பட்​டது.

இதேவேளை, கோளாறு சரிசெய்​யப்​பட்​டு, 12.05 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் விண்​ணில் செலுத்​தப்​பட்​டது.

அதிவேக​மாக விண்​ணில் பயணித்த ராக்​கெட் அடுத்​தடுத்த நிலைகளை துல்​லிய​மாக கடந்​து, 450 கி.மீ. தொலை​வில் உள்ளதிட்​ட​மிட்ட சுற்​று​வட்​டப் பாதையை 16 நிமிடங்களில் அடைந்​தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button