கவிதைகள்
குற்றமற்றவரின் கடுஞ்சொல்லும் இனிதே!… கவிதை…. அன்பு ஜெயா

பா வகை: ஒப்பாரிப் பாட்டு என்ற சிந்து பாடல்
(ஒப்பாரி)
குற்றமிலார் சொல்நன்றே
வற்றாதோர் அன்புண்டே;
கடுஞ்சொல்லும் மாற்றிடுமே
விடுபடுவாய் நல்வழிக்கே;
மற்றவரின் இன்சொல்லோ
சற்றுமுனைக் காத்திடாதே;
குற்றமிலார் பின்சென்றே
குற்றமின்றி வாழ்வாயே;
பற்றுமின்பம் வாழ்வினிலே!
(ஒப்பாரி வேற்றினம்)
குற்றமற்றோர் கடுஞ்சொல்லும் கூறுவருன்
குற்றமதும் கலைந்திடவே கூறுகின்றார்;
அவர்கூறும் கடுஞ்சொல்லில் அன்புண்டே
தவறுநீக்கி அவருரையால் தழைத்திடுவீர்;
மற்றவரின் கடுஞ்சொல்லோ மனங்கலக்கும்
உற்றதோர் துணைத்தேட உனைவிரட்டும்;
நாயனாரும் எறிந்தகல்லை நயந்தேற்றார்
நயமான மாறனம்பை நாடலையே;
மாறாத சாக்கியனின் மாண்பதுவோ
மாறனம்பு மென்மைதான் மனமிலையே;
வற்றாத அன்புடனே வாழ்ந்தாலே
குற்றமற்றோர் உயர்வாரே குணத்தாலே!
——————————

![]()