கவிதைகள்

நற்பண்பு இல்லாதாரை நீங்கிடு!… கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

(பா வகை: பண்ணத்தி என்ற பாடல்)
எடுப்பு
கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு
கடனின்றி வாழ்ந்திட!
தொடுப்பு
நற்பண்பே இல்லாரை நண்பராய்க் கொள்ளாதே
நற்பண்பே காத்திடும் நம்வாழ்வில் நாளுமே!

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு
கடனின்றி வாழ்ந்திட!)
முடிப்பு
கடன்பட்டார் நெஞ்சம் கலங்கியே தீருமே
கடன்நீக்கி வாழ்வில் கலக்கம் தவிர்ப்பமே!
கடமையேதும் இல்லையே கற்பிலா மனைவியுடன்
காலமும் வாழ்ந்திட கலைந்திடே உறவையே! (1)

நல்லபண்பே இல்லா நண்பரை நீங்கிடு
நல்லதோர் பெருமையும் நாடிவந்து சேருமே!
நல்லவர் சேர்க்கையால் நாளுமுன் வாழ்விலே
நற்பயன் சேர்ந்திடும் நல்லின்பம் நிலைக்குமே! (2)

(கடன்கலங்க வைத்திடுமே – கற்றிடு
கடனின்றி வாழ்ந்திட!)
———————————

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *