பலதும் பத்தும்
வடக்கே மீண்டும் இன்று முதல் ரயில் சேவை

டித்வா சூறாவளி காரணமாக தற்காலிகமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் பாதைப் போக்குவரத்து சேவைகள் இன்று 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, இன்று முதல் ரயில்கள் வழமை போல இயங்கும்.
எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக வடக்கு பாதையில் பல மேலதிக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
![]()