கவிதைகள்
கற்றோர் அவையில் கல்லாதவனுக்குத் துன்பமே!… கவிதை… அன்பு ஜெயா

(பா வகை: காவடிச் சிந்து)
கல்வியின்றி நல்லறிவு மில்லை – குதிரைக்கும்
கல்லானைச் சுமத்தல் தொல்லை – என்றும்
கல்வியில்லான் சொல்லின்னல்
கல்வியின்றேல் வாழ்விலின்னல்
கல்வியே – உயர்த்தும் – உலகையே! (1)
செல்வம் இல்லான் சொல்லும் – துன்பமே
செல்வம் உள்ளான்சொல் வெல்லும் – அவையில்
கல்லான்சொல் துன்பமே
கல்விதான் வெல்லுமே
கற்போம் – வாழ்வில் – உயர்வோம்! (2)

![]()