விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?

நம்முடைய ஆன்மீகத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அப்படியாக விளக்கேற்றும் பொழுது நாம் நிறைய முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
வேதத்தின்படி நாம் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றலாம். ஆனால் நாம் மேற்கு மற்றும் தெற்கு திசையில் விளக்கேற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதைப்போல் எப்பொழுதும் நம் வீடுகளில் வாசல் தெளித்து கோலமிட்ட பிறகு பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும்.
நாம் விளக்கேற்றும் பொழுது பருத்தியாலான பஞ்சுதிரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றலாம்.
அதேபோல் நாம் நிறைய இடங்களில் பஞ்ச தீப எண்ணெய் என்று கேள்விப்பட்டிருக்கும். அதாவது வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் இழுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்தது தான் பஞ்ச தீபம் ஆகும்.
![]()