உலகம்

நைஜீரியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாரு உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கடௌரி சுரங்கத் தளத்தில் ஏராளமான சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் ஈடுபட்ட உள்ளூர்வாசியான சனுசி அவ்வால், தனது உறவினரின் உடல் உட்பட குறைந்தது 13 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளார்.

“சுரங்கம் இடிந்து விழுந்த போது 100க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் வேளையில் ஈடுபட்டிருந்தனர்” என்று சனுசி அவ்வால் குறிப்பிட்டுள்ளார்

ஜம்ஃபாரா மாநில சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முஹம்மது இசா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களை தோண்ட முயற்சிக்கும்போது சில மீட்புப் பணியாளர்களும் மூச்சுத் திணறி இறந்துள்ளனர்.

ஜம்ஃபாராவில் சட்டவிரோத சுரங்கம் பொதுவானது, அங்கு ஆயுதமேந்திய கும்பல்கள் பெரும்பாலும் தங்க சுரங்கங்களை கட்டுப்படுத்துகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *